இறைமைந்தரின் அருளால், சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்தின் நல் ஆலோசனைத் திருப்பணி ஊழியத்தின் மூலம் நடைபெறும் கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தின் பிரதான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிரதான காங்கிரீட் பணி (5000 Sq Feet) இன்று (16.03.2026) நடைபெறுகிறது.
காலை 11.00 மணிக்கு அதற்கான ஆயத்த ஜெபம் நடைபெற்றது. ஸ்தோத்திரம் இயேசு நாதா என்ற பாடல் பாட்டப்பட்டது. கோவிலூற்று சேகர தலைவர் Rev. ஜீவா தாமஸ் ஐயா அவர்கள் ஜெபம் செய்ய நல் ஆலோசனைத் திருப்பணி இயக்குநர் Rev. S. ஆமோஸ் ஐயா அவர்கள் ஆசீர்வதிக்க இனிதே காங்கிரீட் பணி துவங்கியது.
0 Comments